திருக்கோவில்
பிரதேசத்திற்குட்பட்ட சங்குமண்கண்டி காட்டுப் பிள்ளையார் ஆலயத்தில்
தொடராக திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (07-09-2025)நீர் இறைக்கும் மோட்டார் இயந்திரம், நீர் குழாய், பொங்கல் பானைகள், மண்வெட்டி போன்ற பொருட்கள்
திருட்டுப் போயுள்ளன. திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் இது குறித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆலய பரிபாலன சபையின் செயலாளரும் முன்னாள் பிரதிக் கல்விப் பணிப்பாளருமான வா.குணாளன் தெரிவிக்கையில்
வரலாற்று
பிரசித்தி சங்குமண்கண்டி கிராமத்தின் உள் வீதியில் அமைந்துள்ள காட்டுப்
பிள்ளையார் ஆலயத்தின் கட்டுமானப்பணிகள் தற்போது நடைபெற்றுவருகிறது. இது
காட்டுப் பகுதியில் இருக்கிறத ஆலயம்.இவ் ஆலய மடத்தில் வைக்கப்பட்டிருந்த
மண்வெட்டி போன்ற பொருட்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேளையில்
திருடப்பட்டுள்ளன.
இது பற்றி திருக்கோவில் போலிஸில் முறைப்பாடு செய்துள்ளோம்.
இங்கிருந்த உண்டியல் கடந்த மாதம் திருடர்களினால் தூக்கிச் செல்லப்பட்டிருந்து.
பிரதேசத்தில்
இவ்வாறான திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கண்டுபிடித்து சட்ட
நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கேட்டுள்ளோம் என்றார்.
( வி.ரி.சகாதேவராஜா)







