தியாக தீபம் திலீபனுக்கு சிலை-

 


தியாக தீபத்திற்கு சிலை வைப்பதற்கும் பொக்கணை வீதிக்கு திலீபன் வீதி என பெயர் மாற்றுவதற்கும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை முன்றலில் நேற்று (25) பிரதேச சபையின் தவிசாளர் தலைமையில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

அஞ்சலிச் சுடரினை இந்நாள் பிரதேச சபையின் உறுப்பினர் விஜயதாரணி ஏற்றிவைத்தார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பிரதேச சபையின் அவை அமர்வில் தியாக தீபத்தினை நினைவு கூர்ந்து முன்னைய காலங்களில் திலீபன் வீதி என பிரயோகத்தில் காணப்பட்டு பின்னரான சூழ்நிலையில் பொக்கணை வீதி காணப்படும் வீதியை புனரமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவதற்கும் அவ்வீதியின் பெயரை நிர்வாக நடைமுறைகளுக்கு அமைவாக திலீபன் வீதி என மீளவும் மாற்றி அமைக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டது.