பிரபல பொலிவுட் நடிகை திஷா
பதானியின் வீட்டின் வெளியே துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் என்கவுன்டரில்
சுட்டுக்கொல்லப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள
நடிகை திஷா பதானியின், வீட்டின் வெளியே கடந்த 12ஆம் திகதி அதிகாலையில்
அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பான சூழல்
நிலவியது.
இவ்வழக்கில் சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றிக் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அதில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் ரவிந்திரா மற்றும் அருண் எனும் இருவர் எனக் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், அவ்விருவரையும் காசியாபாத் அருகே காவல் துறையினர் சுற்றிவளைத்தனர்.
அப்போது, அவர்கள் இருவரும் காவல் துறையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, காவல் துறையினர் நடத்திய பதில் துப்பாக்கிச்சூட்டில் இருவரும் பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால், சிகிச்சை பலனின்றி அவர்கள் இருவரும் உயிரிழந்தனர்.
அவர்களிடமிருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.