ஊடகவியலாளர் நிமலராஜனின் கொலை வழக்கு விசாரணை தொடர்பான அறிக்கை வெளியீடு .

 


படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் விசாரணை அறிக்கை வவுனியா ஊடகவியலாளர்களால் இன்று (10.09) விநியோகிக்கப்பட்டது.

வவுனியா இலுப்பையடி பகுதியில் வைத்து பொதுமக்கள், வர்த்தகர்கள், சாரதிகள் ஆகியோருக்கு இவ் அறிக்கை விநியோகிக்கப்பட்டது.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜன் கொலை வழக்கின் விசாரணை அறிக்கை மற்றும் கொல்லப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் தொடர்பான தகவல்களை உள்ளடக்கிய குறித்த அறிக்கை விநியோகிக்கப்பட்டது.

இதில் வவுனியா ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.