மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட உள்ளுர் உற்பத்தி பொருட்களுக்கான பிரதேச மட்ட விற்பனை கண்காட்சி 17.09..2025 காலை பிரதேச செயலக வளாகத்தில் இடம் பெற்றது.
இந்த விற்பனை கண்காட்சியை மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் திருமதி. லக்ஷன்யா பிரசாந்தன் அவர்கள் திறந்து வைத்தார்..
பிரதேச செயலக அபிவிருத்தி பிரிவின் உத்தியோகத்தர்களின் ஒழுங்கு படுத்தலின் கீழ் கண்காட்சியும் விற்பனையும் முன்னெடுக்கப்பட்டது .
பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சிறு தொழில் முயற்சியாளர்களினால் உற்பத்தி செய்யப்பட்ட உள்ளூர் உற்பத்தி பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததோடு, கலந்து கொண்டோரினால் பெருமளவான உற்பத்திப் பொருட்கள் கொள்வனவு செய்வதில் ஆர்வம் செலுத்தியமையை காணக்கூடியதாக இருந்தது.
இந் நிகழ்வு உள்ளூர் உற்பத்தியாளர்களின் தொழில் முயற்சியினை ஊக்கப்படுத்துவதுடன் அவர்களின் உற்பத்திப்பொருட்களை விற்பனை செய்வதற்கான சிறந்த களமாக காணப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
பிரதேச செயலகத்தினால் சிறுதொழில் முயற்சியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல்வேறு செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்திக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது .
செய்தி ஆசிரியர்
.