மியன்மாரில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் பாடசாலை மாணவர்கள் 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் 22 மாணவர்கள் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது 15 தொடக்கம் 21 வயதுக்குட்பட்ட மாணவர்களே கொல்லப்பட்டுள்ளனர்.
ஆயுதக்குழுவுக்கும், அரச படையினருக்கும்
இடையில் இடம்பெற்ற மோதலின் போது, இரண்டு தனியார் உயர்நிலைப் பாடசாலைகள்
மீது விமானத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி
வெளியிட்டுள்ளன.