"உலகை அறிவோம் - விவாத மேடை" நிகழ்வின் இரண்டாம் கட்டமானது இன்றைய தினம் (04.09.2025) மட்/பட்/ பெரியகல்லாறு மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

 

 




























மண்முனை தென் எருவில்பற்று  பிரதேச செயலகமானது கலாசார அலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்து நடாத்தும் "உலகை அறிவோம் - விவாத மேடை" நிகழ்வின் இரண்டாம் கட்டமானது இன்றைய தினம் (04.09.2025)  மட்/பட்/ பெரியகல்லாறு மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.   

பாடசாலை அதிபர் திரு எஸ். சசிதரன் அவர்களின்  தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதேச செயலாளர் திரு உ. உதயஸ்ரீதர் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

இந்த விவாத நிகழ்வில் "நவீன விஞ்ஞான தொழில்நுட்பத்தால்  கலாசாரம் எழுச்சியடைகின்றது .... எழுச்சியடையவில்லை...  " எனும் தலைப்பில் மாணவர்கள் தங்கள் வாத,  பிரதிவாதங்களை மிகவும் சிறப்பான முறையில்  முன்வைத்திருந்தனர்.

இவ் விவாத நிகழ்வானது மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட 5 பாடசாலைகளில் முன்னெடுக்கப்படுகின்றமை  குறிப்பிடத்தக்கது.

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பன்னிரெண்டு மாத விளக்கு  வேலைத்திட்டத்தின் கீழ் இடம்பெறும் இவ் விவாத நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர்கள்,  ஆசிரியர்கள், சிரேஷ்ட ஊடகவியலாளர், அலுவலக உத்தியோகத்தர்கள் , மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

 இந்த நிகழ்வின் நடுவர்களாக ஓய்வு பெற்ற அதிபர், எழுத்தாளர் திரு கே. நாகேந்திரன் மற்றும் கதிரவன் பட்டிமன்ற பேச்சாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி A. நர்மதா அவர்களும் பணியாற்றியிருந்தனர்.

இந்த நிகழ்வை ஆசிரியர் திருமதி டி. அனோஜா ஒழுங்கு செய்திருந்ததுடன், பிரதேச செயலக  கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஒருங்கிணைப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.