முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று (01) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
காலி முகத்திடலில் போராட்டம் நடத்தியவர்கள் மீதான தாக்குதலைக்
கட்டுப்படுத்தத் தவறியது தொடர்பாக முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து
தென்னகோன் அளித்த வாக்குமூலம் தொடர்பில் கோட்டாபய ராஜபக்சவுக்கு இந்த
அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.