கல்முனை
முத்தமிழ் கலைக்கூடத்தின் "நிருத்தியார்ப்பணம்" பரதநாட்டிய நிகழ்ச்சி
காரைதீவு விபுலானந்தா கலாசார மண்டபத்தில், கலைக் கூடத்தின் தலைவர்
சிவசிறி அடியவன் பிரமின் தலைமையில் சனிக்கிழமை(16) நடைபெற்றது .
இந்நிகழ்வில்,
பிரதம அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தர் அழகியல்
கற்கைகள் நிறுவன பணிப்பாளர் பேராசிரியர் கலாநிதி பாரதி கென்னடி கலந்து
சிறப்பித்தார் .
கௌரவ
அதிதிகளாக நிறுவனத்தின் நடனம் அரங்காற்றுகை திணைக்கள சிரேஸ்ட
விரிவுரையாளர் கலாநிதி துரைசிங்கம் உஷாந்தி , மட்டக்களப்பு வலயக் கல்வி
பணிமனையின் அழகியகல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் கலாநிதி மலர்விழி
சிவஞானசோதிகுரு, ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் வித்தகர்
விபுலமாமணி வி.ரி. சகாதேவராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள் .
அழைப்பு
அதிதிகளாக கல்முனை வலய நடன ஆசிரிய ஆலோசகர் ரிகே.றீசா பத்திரண மற்றும்
திருக்கோவில் ஆசிரிய ஆலோசகர் திருமதி.தங்கமாணிக்கம் சிறப்பித்தார்கள் .
நடனத் துறையில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்த ஐந்து மாணவிகளின் நடன ஆற்று கைகள் சிறப்பாக நடைபெற்றன.
( வி.ரி.சகாதேவராஜா)