மட்டக்களப்பு கல்லடி கிறிஸ்தவ ஆலயத்திற்கருகாமையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

 











இன்று 03.08.2025 ஞாயிற்றுக்கிழமை பிரதான வீதியில் அமைந்துள்ள கிறிஸ்தவ ஆலயத்திற்கருகாமையில் 63 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம்  மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி  பொலீசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சடலமானது கிராங்குளம் பகுதியைச் சேர்ந்த அய்யாதுரை பத்மநாதன் என்பவரரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் வீட்டில் இருந்து ஆரையம்பதி வைத்தியசாலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து வெளியேறி மூன்று நாட்களாக தேடப்பட்டு வந்திருந்த நிலையில் காத்தான்குடி  பொலீஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலீசார் முன்னெடுத்து வருகின்றனர்.