வங்கிகளில்
போதுமான நிதி இல்லாமல், காசோலைகளை விநியோகிக்கும் ஒருவருக்கு அபராதம்
மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கான சிறைத்தண்டனை வழங்கப்படும் வகையில்
சட்டத்திருத்தம் ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளது.
விரைவில் இது தொடர்பான சட்டத்திருத்தம் நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாக ஆங்கில செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.
போதுமான
நிதி இல்லாமல் காசோலைகளை வழங்குவோரும், மூடிய கணக்கிலிருந்து காசோலைகளை
வழங்குவோரும் இந்த சட்டத்தின்படி தண்டிக்கப்படுவார்கள்.
வங்கிகளுக்கு
நிதிப்பாதுகாப்பை வழங்கும் வகையில் மேற்கொள்ளப்படவுள்ள இந்த
திருத்தங்களின் கீழ், விதிக்கப்படும் அபராதம், வங்கியில் உரிய நிதியின்றி
திரும்பிய காசோலைக்குச் சமமான தொகையாக இருக்கும் என்று
முன்மொழியப்பட்டுள்ளது.
இந்தநிலையில்
காசோலையை வழங்கிய ஒருவர், காசோலையைப் பெற்றவரின் கோரிக்கையின் கீழ் 90
நாட்களுக்குள் பணத்தைச் செலுத்தாது போனால் இந்த திருத்தத்தின்கீழ் சட்ட
நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.