தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான மாட்டு வண்டி போட்டி இன்றைய தினம் கிளிநொச்சியில் இடம்பெற்றது.
கண்டவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கனை பகுதியில் அமைந்துள்ள தமிழ் முற்றம் என்னும் சவாரி திடலில் சுமார் பதினைந்து வருடங்களின் பின்னர் இன்றைய தினம் குறித்த போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் இருந்து 130 க்கும் மேற்பட்ட ஜோடிகள் போட்டியில் பங்கு பற்றின.
பங்குபற்றி வெற்றி ஈட்டிய காளைகளுக்கு பெருமதி மிக்க பரிசில்களும் வழங்கப்பட்டன.