நாட்டில் உள்ள பாதுகாப்பு
பிரிவில் உள்ள தேவையற்ற செலவைக் குறைக்க வேண்டிய நெருக்கடி அரசாங்கத்துக்கு
உருவாகக்கூடும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
தெரிவித்தார்.
இனப்பிரச்சினையைத் தீர்க்காமல் பாதுகாப்பு பிரிவில் உள்ள ஆளணியை குறைக்க முடியாது எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டார்.
நாட்டை பிரிக்குமாறு தாம் கோரவில்லை எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டார்.
சமஷ்டி என்பது நாட்டை பிரிக்கும் விடயமில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.





