மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்தில் வீடு ஒன்றில் உறவினருக்கு எற்பட்ட வாய்தர்கத்தையடுத்து இடம்பெற்ற பெண் ஒருவர் மீது மேற்கொண்ட வாள்வெட்டு சம்பவத்தில் ஒரு வயது குழந்தை உட்பட இருவர் படுகாயமடைந்ததுடன் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டவரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) இடவு இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி தீர்த்தகரை வீதியிலுள்ள வீடு ஒன்றில் வாழந்துவரும் பெண் ஒருவருக்கும் அவரது உறவினருக்கும் இடையே பண கொடுக்கல் வாங்கலையிட்டு சம்பவதினமான நேற்று இரவு 9.00 மணியளவில் பெண்ணின் வீட்டுக்கு சென்ற உறவினர் பணத்தை கேட்டு ஏற்பட்ட வாய்தர்க்கத்தையடுத்து பெண்ணின் உறவினரான ஆண் பெண்மீது வாளால் வெட்டு தாக்குதலை மேற்கொண்டதையடுத்து பெண்ணும் அவரது ஒரு வயது குழந்தையும் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளனர்.
இதனையடுத்து படுகாயமடைந்த குழந்தையையும் அவரது தாயாரையும் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அதேவேளை குறித்த பெண்மீதும் அவரது குழந்தை மீதும் தாக்குதலை நடாத்தியவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.