செம்மணி - சித்துபாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் இன்று 20 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்படவுள்ளன.
அதற்கமைய, நேற்றும், நேற்று முன்தினமும்
9 மனித என்புகூட்டுத்தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக,
பாதிக்கப்பட்டோர் தரப்பு சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
அதன்படி, செம்மணி, சித்துப்பாத்தி மனித
புதைகுழியிலிருந்து இதுவரையிலும் மீட்கப்பட்ட மற்றும் அடையாளம் காணப்பட்ட
மனித என்புக்கூடுகளின் எண்ணிக்கை 88 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.