உலகின் மிகவும் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் இலங்கை 59 ஆவது இடத்தில் உள்ளது. பாதுகாப்பான நாடாக மாறுவது எப்போது ?

 


உலகின் மிகவும் பாதுகாப்பான நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.

2025 ஆம் ஆண்டில் உலகின் பாதுகாப்பான நாடாக அன்டோரா பெயரிடப்பட்டுள்ளது.

நம்பியோ பாதுகாப்பு குறியீட்டின்படி (Numbeo Safety Index) குறித்த நாடு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம், கட்டார், ஓமன் ஆகிய 3 மத்திய கிழக்கு நாடுகள், உலகின் மிகக் குறைந்த குற்ற விகிதம் மற்றும் வலுவான பாதுகாப்பு உட்கட்டமைப்பு கொண்ட முதல் ஐந்து நாடுகளில் இடம்பெற்றுள்ளன.

இதேவேளை இலங்கை 59 ஆவது இடத்தில் உள்ளது.

இந்த தரவரிசையில் 19.3 புள்ளிகளுடன் இறுதி இடத்தில், அதாவது மோசமான பாதுகாப்பு கொண்ட நாடாக வெனிசுவேலா உள்ளது.
மோசமான பாதுகாப்பு கொண்ட நாடுகள் பட்டியலில் வெனிசுவேலா, பப்புவா நியூ கினியா, ஹைதி, ஆப்கானிஸ்தான், தென்னப்பிரிக்கா, ஹோண்டுராஸ், டிரினிடாட் & டொபாகோ, சிரியா, ஜமைக்கா, பெரு ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களில் உள்ளன.

பயனாளர்கள் அளிக்கும் தரவுகளை பயன்படுத்தி நம்பியோ பாதுகாப்பு குறியீடு தொகுக்கப்படுகிறது.

குற்ற விகிதங்கள், பொது பாதுகாப்பு பற்றிய கருத்துகள், சமூக காவல் பணியில் உள்ள சவால்கள், தனிப்பட்ட பாதுகாப்பு கவலைகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை பயன்படுத்தி பல்வேறு இடங்களின் பாதுகாப்பை மதிப்பிடுவதற்கான ஒப்பீட்டு கருவியாக இந்த குறியீடு பயன்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.