வரலாற்று
பிரசித்தி பெற்ற திருக்கோவில் சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த
ஆடி அமாவாசை திருவிழாவில் ஒரே தடவையில் 500 மாணவர்கள் கலந்து கொண்ட ஒரு
நிகழ்வு நேற்று முன்தினம் நடைபெற்றது.
திருக்கோவில்
வலயக்கல்வி பணிப்பாளர் இரா.உதயகுமாரின் ஒழுங்கமைப்பில் கலாச்சார
உத்தியோகஸ்த்தர் சங்கீத ஆசிரியர்களின் பெரும் ஏற்பாட்டில் இந்த ஐந்நூறு
மாணவச் செல்வங்கள் கலந்து கொண்டனர்.
திருக்கோவில்
ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமியின்மனம் குளிர அவர்கள் கந்த சஷ்டி கவசம்
மற்றும் திருப்புகழ் பாராயணம் செய்து வரலாற்றுச் சாதனை புரிந்தார்கள்.
ஆலய குருவும் அருளுரை வழங்கினார்.
தினமும் அங்கு பகல் இரவு திருவிழாக்கள் இடம்பெற்று வருகின்றன.
எதிர்வரும்
24 ஆம் தேதி வியாழக்கிழமை சமுத்திர தீர்த்தோற்சவம் இடம்பெறும் என ஆலய
பரிபாலன சபையின் தலைவர் சுந்தரலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.
( வி.ரி.சகாதேவராஜா)