ரூஹுன பல்கலைக்கழக மாணவர் ஒருவர், வங்கிக் கணக்கில் அனுமதியின்றி இணையம்
மூலம் அணுகி 50 லட்சம் ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது
செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் துறையினரால் (CID) இந்த மாணவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர் வவுனியாவைச் சேர்ந்த சின்ன புத்துக்குளத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞர் ஆவார்.
CIDயின் இணையக் குற்றப்பிரிவு பெறப்பட்ட முறைப்பாட்டை அடுத்து விசாரணைகளை மேற்கொண்டு, சந்தேக நபரைக் கைது செய்தது.
கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.