மட்டக்களப்பு கல்லடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய அறநெறிப் பாடசாலை/ கலாசாரமண்டப அங்குரார்ப்பண நிகழ்வும் , கொடையாளி தம்பதியினரை கௌரவிக்கும் நிகழ்வும்.

 













































 

 

 

கனடா வாழ் கல்லடியை  பூர்வீகமாக கொண்ட      திரு/ திருமதி தங்கவடிவேல், ரஞ்சிதராணி தம்பதியினரால் பல மில்லியன்கள் செலவில் ,மட்டக்களப்பு கல்லடி ஸ்ரீ  கிருஷ்ணர்  சுவாமி வீதியில்  ஆலயத்துக்கு சொந்தமான காணியில் கல்லடி சிறார்களின் கல்வி மேம்பாட்டுக்காக   சகல வசதிகளுடன் கூடிய அறநெறி-கலாசாரமண்டபம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டு  ஆலயபரிபாலன சபையினரிடம்  15-06-2025 நேற்று    கையளிக்கப்பட்டது. அறநெறி,கலாசாரமண்டபம்  அமைக்க பூரண  அனுசரணை வழங்கிய   தம்பதியினரை   கெளரவிக்கும் முகமாக  பிரமாண்டமான விழா ஒன்று.முன்னெடுக்கப்பட்டது.

 ஆலய செயலாளர் த. சாந்திக்குமார் அவர்களின் வரவேற்புரையுடனும் .
கல்லடி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ பாலசதீஸ்வரக்குருக்கள் அவர்களின் ஆசியுரையுரையுடனும்,
கெளரவ ஆலயத்தலைவர் முன்னாள் மாநகர முதல்வர்     திரு.தி.சரவணபவன் அவர்களின் தலைமையின் கீழ், கவிஞர் கவிவாணர்,கவிச்சுடர் கல்லூர்சாந்தி அவர்கள்  நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. .

 கல்லடி ஸ்ரீ சித்திவிநாயகர் அற நெறிப்பாடசாலை மாணவர்களின் நடன நிகழ்வும் தாளலய நாட்டிய நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டன.
பிரதேசவாழ்  பல கல்விமான்கள், பிரதேச செயலாளர், அறிஞர்கள் ,சமூக மேன்பாட்டு கழக உறுப்பினர்கள் ,சமூக செயற்பாட்டாளர்கள் , பொதுமக்கள் , அறநெறி பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள்   என பலர் பங்குபற்றி நிகழ்வை மெருகூட்டினர்.

 வள்ளல் தம்பதியினரை அறநெறிப்பாடசாலை அதிபர் திருமதி. அருட்ஜோதி அம்மணி,   உதவும் கரங்கள் அமைப்பின் தலைவர் திரு ச.ஜெயராஜ், மற்றும் ஆலய பரிபாலன சபையினர் பொன்னாடை போற்றி  நினைவுச்சின்னங்கள் வழங்கி  கெளரவித்தனர்.

விவேகானந்தா மகளிர் கல்லூரி முன்னாள் அதிபர் திருமதி திலகவதி ஹரிதாஸ், ஹரி இல்ல ஸ்தாபகர் திரு.ச.சந்திரகுமார் போன்றோர் உரையாற்றினர். இறுதியாக, ஆலயபரிபாலன சபை உப தலைவரும்,கெளரவ மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினருமான  திரு.ச பிறேமானந்தன் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வு இனிது நிறைவடைந்தது.

FREELANCER