மட்டக்களப்பு கல்லடி ஹரி சிறுவர் இல்லத்தில் இருந்து பொறியியல் மற்றும் ஏனைய துறைகளில் பல்கலை கழகத்துக்கு தெரிவான மாணவர்களுக்கான பாராட்டு நிகழ்வு ஹரி இல்ல கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது .
ஹரி சிறுவர் இல்லத் தலைவர் ச .சந்திரகுமார் அவர்களின் தலைமையில் இடம் பெற்ற பாராட்டு நிகழ்வுக்கு ஆன்மீக அதிதியாக மட்டக்களப்பு கல்லடி உப்போடை இராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் அவர்களும் , பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி .சிவப்பிரியா வில்வரெத்தினம் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள் .
சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் க .சசிக்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார் .
பொறியியல் மற்றும் ஏனைய துறைகளில் பல்கலை கழகத்துக்கு தெரிவான மாணவர்கள் பொன்னாடை வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு மடிக்கணணிகளும் வழங்கப்பட்டன .
ஹரி இல்ல ஆசிரியர்களுக்கும் மற்றும் அதிதிகளுக்கும் நினைவு சின்னங்கள் வழங்கப்பட்டதோடு பொன்னாடை போர்த்தி கௌவிக்கப்பட்டார்கள்
நிகழ்வுக்கு முன்னாள் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தி .சரவணபவன் மற்றும் கொடையாளர்கள் , பாடசாலை அதிபர்கள் , உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் , பெற்றோர்கள் ,சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தார்கள் .