மட்டக்களப்பு சென்மேரிஸ் மொண்டசூரி முன்பள்ளி பகல் நேர குழந்தைகள் பராமரிப்பு நிலைய பணிப்பாளர் திருமதி .R.பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் கலந்துரையாடல் அமர்வு 30.05.2025. அன்று இடம் பெற்றது .
அங்கு உரையாற்றிய நிலைய பணிப்பாளர்
கடந்த
2023.11.21. அன்று சென்மேரிஸ் மொண்டசூரி முன்பள்ளி மற்றும் பகல் நேர
குழந்தைகள் பராமரிப்பு நிலையம் சேவை நோக்கத்துக்காக ஆரம்பிக்கப்பட்டதில்
இருந்து இன்றுவரை மிகவும் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது என்றும்
நன்கொடையாளர் பற்றியும் விளக்கம் அளித்தார் , மற்றும் வைத்தியர்
மொண்டசூரி அம்மையார் அவர்களின் அணுகுமுறை பற்றியும் உரையாற்றினார்.
மேலும் இவ் கலந்துரையாடல் அமர்வில் கிழக்கு மாகாண முன்பள்ளி பணியகத்திற்கான தலைவர் திரு .M.A. அமீர்டீன் ( சமாதான நீதிவான் ) N.D.T.(AG), அவர்களும் மற்றும் மாவட்டசெயலக ECCD. V. முரளிதரன் அவர்களும் ,
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய ஒருங்கிணைப்பாளரும் ,சிறுவர் விசேட கல்வி உத்தியோகத்தர் A.ஜெயகரன் அவர்களும் ,மட்டக்களப்பு சர்வோதய தலைவர் கரீம் அவர்களும் கலந்து கொண்டார்கள் .
தொடர்ந்து முன் பள்ளி, பகல் நேர குழந்தைகள் பராமரிப்பு நிலைய ஆசிரியர் திருமதி லதா ரூபன் கற்றல் செயட்பாடுகள் சம்பந்தமாக விளக்கம் அளித்தார் .
சென்மேரிஸ் மொண்டசூரி முன் பள்ளி பகல் நேர குழந்தைகள் பராமரிப்பு நிலைய முகாமையாளர் திருமதி கமலினி சூரிய குமாரன் அவர்கள் குழந்தைகள் பராமரிப்பு நிலைய நேரசூசி , உணவு அடடவனை மற்றும் குழந்தைகள் பராமரிப்பு எவ்வாறு அமைகின்றன என்பது பற்றியும் முன்பள்ளி முடிவுற்றதும் பெற்றோர்கள் சிறார்களை அழைத்து செல்லும் வரையிலான விடயங்களை விரிவாக எடுத்து விளக்கினார் .
மட்டக்களப்பு சென்மேரிஸ் மொண்டசூரி முன் பள்ளியானது பகல் நேர குழந்தைகள் பராமரிப்பு நிலையம் மட்டுமல்லாமல் ஒரு கல்வி மையமாகவும் நவீன சூழலுக்கு ஏற்றவாறு ஆற்றலும் ஆளுமையுமுள்ள சிறார்களை உருவாக்க சென்மேரிஸ் மொண்டசூரி பெரும் பங்காற்றி வருகிறது .
.06.மாத குழந்தைகளில் இருந்து பகல் நேர பராமரிப்பிக்காக சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள் என்ற தகவலை தெரிவிப்பதோடு
பொதுமக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த கலந்துரையாடல் அமர்வு முன்னெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது .
இவ் கலந்துரையாடல் அமர்வில் இயக்குனர் குழுமம் ,பெற்றோர்கள் , சமூக ஆர்வலர்கள் மற்றும் சுகாதார துறையினர் ஆகியோரும் சமூகமளித்திருந்தார்கள் .