மட்டக்களப்பு சென்மேரிஸ் மொண்டசூரி முன்பள்ளி பகல் நேர குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தில் கலந்துரையாடல் அமர்வு இடம் பெற்றது .

 


 

















 










மட்டக்களப்பு சென்மேரிஸ் மொண்டசூரி  முன்பள்ளி  பகல் நேர குழந்தைகள் பராமரிப்பு  நிலைய பணிப்பாளர் திருமதி .R.பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் கலந்துரையாடல் அமர்வு   30.05.2025. அன்று  இடம் பெற்றது .

 அங்கு உரையாற்றிய நிலைய பணிப்பாளர்
கடந்த 2023.11.21. அன்று சென்மேரிஸ் மொண்டசூரி முன்பள்ளி மற்றும் பகல் நேர குழந்தைகள் பராமரிப்பு நிலையம்  சேவை நோக்கத்துக்காக ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து  இன்றுவரை மிகவும் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது   என்றும் நன்கொடையாளர் பற்றியும் விளக்கம் அளித்தார்  , மற்றும்  வைத்தியர் மொண்டசூரி அம்மையார் அவர்களின் அணுகுமுறை பற்றியும்   உரையாற்றினார்.

மட்டக்களப்பு  மண்முனை வடக்கு பிரதேச செயலக சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு உத்தியோகத்தர் நிரோஷன் அவர்கள் பகல் நேர பராமரிப்பு பற்றியும் , நிலையத்தை நிர்வகிக்கும் விதிமுறைகள் , மற்றும் பராமரிப்பாளர்கள் பணியாளர்கள் ,பெற்றோரின் கடமை பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார் .
மேலும் இவ் கலந்துரையாடல் அமர்வில் கிழக்கு மாகாண முன்பள்ளி பணியகத்திற்கான தலைவர்  திரு .M.A. அமீர்டீன் ( சமாதான நீதிவான் )  N.D.T.(AG),  அவர்களும்    மற்றும் மாவட்டசெயலக ECCD.  V.   முரளிதரன்  அவர்களும் ,  
 மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய ஒருங்கிணைப்பாளரும் ,சிறுவர் விசேட கல்வி உத்தியோகத்தர் A.ஜெயகரன் அவர்களும்  ,மட்டக்களப்பு சர்வோதய தலைவர் கரீம் அவர்களும் கலந்து கொண்டார்கள் .
தொடர்ந்து முன் பள்ளி, பகல் நேர குழந்தைகள் பராமரிப்பு  நிலைய  ஆசிரியர் திருமதி  லதா ரூபன் கற்றல் செயட்பாடுகள் சம்பந்தமாக விளக்கம்  அளித்தார் .
சென்மேரிஸ் மொண்டசூரி முன் பள்ளி பகல் நேர குழந்தைகள் பராமரிப்பு  நிலைய முகாமையாளர் திருமதி கமலினி சூரிய குமாரன் அவர்கள் குழந்தைகள் பராமரிப்பு நிலைய நேரசூசி , உணவு அடடவனை மற்றும் குழந்தைகள் பராமரிப்பு எவ்வாறு அமைகின்றன  என்பது பற்றியும் முன்பள்ளி முடிவுற்றதும் பெற்றோர்கள் சிறார்களை அழைத்து செல்லும் வரையிலான விடயங்களை விரிவாக எடுத்து விளக்கினார் .
 
 மட்டக்களப்பு சென்மேரிஸ் மொண்டசூரி முன் பள்ளியானது    பகல் நேர குழந்தைகள் பராமரிப்பு நிலையம்  மட்டுமல்லாமல்   ஒரு கல்வி மையமாகவும்    நவீன சூழலுக்கு ஏற்றவாறு ஆற்றலும் ஆளுமையுமுள்ள  சிறார்களை  உருவாக்க சென்மேரிஸ் மொண்டசூரி  பெரும் பங்காற்றி வருகிறது .
 .06.மாத குழந்தைகளில் இருந்து  பகல் நேர பராமரிப்பிக்காக சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள் என்ற தகவலை தெரிவிப்பதோடு
 பொதுமக்கள் மத்தியில் ஒரு  விழிப்புணர்வை  ஏற்படுத்துவதற்காக இந்த கலந்துரையாடல் அமர்வு முன்னெடுக்கப்பட்டது  என்பது குறிப்பிடத்தக்கது .
இவ் கலந்துரையாடல் அமர்வில் இயக்குனர் குழுமம் ,பெற்றோர்கள் ,  சமூக ஆர்வலர்கள் மற்றும் சுகாதார துறையினர் ஆகியோரும் சமூகமளித்திருந்தார்கள் .