பள்ளைய பேச்சியம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவத்தின் தீமிதிப்பு இ






வாழைச்சேனை பள்ளைய பேச்சியம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவத்தின் தீமிதிப்பு   புதன்கிழமை  இடம்பெற்றது.

கடந்த புதன்கிழமை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமான சடங்கு உற்சவம் இன்று புதன்கிழமை  தீமிதிப்பு மற்றும் தீர்த்தமாடுதலுடன் நிறைவு பெற்றது.

தீ மிதிப்பில் நூற்றுக்கணக்கில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை தங்கள் வேண்டுதலை வேண்டி தீ மிதிப்பில் ஈடுபட்டனர். வாழைச்சேனை இந்து சமுத்திரத்தில் தீர்த்தமாடுதல் இடம்பெற்றது.

ஆலய பிரதம பூசகர் க.சத்தியசீலனால் பூசைகள் யாவும் இடம்பெற்றது.

செவ்வாய்க்கிழமை  மடிப்பிச்சை  எடுத்தல், நெல்குற்றும் சடங்கு என்பன இடம் பெற்றதுடன் புதன்கிழமை  தீமிதிப்பு மற்றும் தீர்த்தமாடுதலுடன் இனிதே சடங்கு நிறைவடைந்தது.

 

 ந.குகதர்சன்