முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் ஊர்க்
குழந்தைகள் மட்டுநகர் சென்று அண்மையில் நிறுவப்பட்ட அவரது கருங்கல் சிலையை
வணங்கி வழிபட்டனர்.
காரைதீவு விபுலானந்தா மொன்டிசோரி மாணவர்கள் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை களப் பயணமொன்றை மேற்கொண்டிருந்தனர்.
மொன்டிசோரி பணிப்பாளர் ஆசிரியர்கள் தலைமையில் பெற்றோர்கள் மாணவர்கள் இப்பயணத்தில் பங்கேற்றனர்.
இவர்கள்
மண்டூர் கந்தசுவாமி ஆலயம், கொக்கட்டிச்சோலை சிவலிங்க அரண்மனை,
தான்தோன்றீஸ்வரர் ஆலயம் ,சுவாமி விபுலானந்த கருங்கல் சிலை, புன்னைச்சோலை
காளியம்மன் ஆலயம், பாசிக்குடா ,ஹப்பி கிட்ஸ் வேர்ல்ட் குழந்தைகள் பூங்கா,
முகத்துவாரம் வெளிச்ச வீடு, கொக்குத்தீவு
போன்ற இடங்களுக்கு விஜயம் செய்தனர்.
ஒருநாள் களப் பயணம் மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது என பெற்றோர்கள் தெரிவித்தனர்.
( வி.ரி.சகாதேவராஜா)