கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு உள்ளூர் ஆட்சி மன்ற பிரதேச சபைகளுக்கான வேட்பாளர் தெரிவு இன்று Y.M.C.A மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ. பிரசாந்தன், முன்னால் மாகாண சபை உறுப்பினர் நாகலிங்கம் திரவியம் தமிழர் முற்போக்கு கழகத்தின் பொதுச்செயலாளர் யோ. ரொஸ்மன் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
நிகழ்வின் ஆரம்பத்தில் மங்கள விளக்கேற்றலினை தொடர்ந்து, மண்முனைப் பற்று, கோறளை பற்று வடக்கு, மட்டக்களப்பு மாநகர சபை , ஏராவூர் நகர சபை [8] பிரதேச சபைகளுக்காக தெரிவு செய்யப்பட்ட 37 வேட்பாளர்கள் பதவி ஏற்று கொண்டனர்.
இதன் போது 37 வேட்பாளர்களும் சத்திய பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர், நிகழ்வில் நன்றியுரை தெரிவிக்கப்பட்டு நிகழ்வு நிறைவு பெற்றது. இதில் பொதுமக்கள் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள். கட்சியில் அங்கத்துவம் பெற்றவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.