கொழும்பு-கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தல திருவிழா, கொடியேற்றத்துடன், செவ்வாய்க்கிழமை (03) ஆரம்பமானது.
மும்மொழிகளிலும், காலை 6 மணிக்கு, திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு கொடியேற்றப்பட்டது. எதிர்வரும் 11ஆம் திகதி வரையிலும் மாலை 6 மணிக்கு நவநாள் வழிபாடுகள் நடைபெறும். 12 ஆம் திகதி இரவு 7 மணிக்கு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் விசேட நற்கருணை ஆராதனையும் நடைபெறும்.
13 ஆம் திகதி திருவிழா நடைபெறும். அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு தமிழ் மொழியிலும் காலை 5 மணிக்கு சிங்கள மொழியிலும் மீண்டும் 6 மணிக்கு தமிழ் மொழியில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.