
மட்டக்களப்பு ஆரையம்பதி ஆதி வைரவர் பாலர் பாடசாலையில் சிறார்களின் கண்காட்சி நிகழ்வு இன்று 2025.06.18.புதன் கிழமை இடம் பெற்றது .
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக முன் பிள்ளைப் பருவ பராமரிப்பும் அபிவிருத்திக்கும் பொறுப்பான மட்டக்களப்பு கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி. அனுரேகா விவேகானந்தன் அவர்களும், சிறப்பு அதிதிகளாக ஆரையம்பதி தெற்கு கிராம உத்தியோகத்தர் திரு ஆறுமுகம் பிரதீபன் , மண்முனைப்பற்று பிரதேச செயலக முன் பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி k.விஸ்னுகாந் மற்றும் மட்/ஆரையம்பதி சிவமணி கனிஷ்ட வித்தியாலய அதிபர் மயில்வாகனம் சிவராஜ் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
ஆதி வைரவர் பாலர் பாடசாலை அதிபர் திருமதி கந்தையா சந்திரகலா தலைமையில் 14 சிறுவர்களின் கைவண்ணத்தில் அழகிய கைவினைப்பொருட்களை உருவாக்கி காட்சிப்படுத்திய கண்காட்சி நிகழ்வை ஆரையம்பதி ஸ்ரீ முருகன் பாலர் பாடசாலை மற்றும் ஆரையம்பதி சிவா பாலர் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பிரதேச வாழ் பொது மக்கள் என பலரும் கண்காட்சியை பார்வையிட்டனர்
பிள்ளைகளின் ஆக்கத்திறனை ஊக்குவிக்கவும் அவர்களது ஆளுமையை மேம்படுத்தவும் அத்துடன் பொது அறிவை விருத்தி செய்யும் நோக்குடன் இக்கண்காட்சி நிகழ்வானது ஒழுங்கமைக்கப்பட்டது.
செய்தி ஆசிரியர்