மே மாதத்தில் மட்டும் பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளில் 7.7% பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்கள் என தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
ஆசியா முழுவதும் கொவிட் பரவல் மீண்டும் அதிகரிக்கும் நிலையில், இலங்கையிலும் புதிய கொவிட் வகை கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சில தரப்புகள் நாட்டில் உரிய தயார்ப்பாடு இல்லையென்று விமர்சனம் தெரிவித்தாலும், சுகாதார அமைச்சு கொவிட் பரவலை கையாள தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.
மக்கள் விழிப்புடன் இருந்து, சுகாதார வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது இன்றைய காலக்கட்டத்தில் மிக முக்கியம்.