

இந்து கலாச்சார அலுவலர்கள் திணைக்களமும் மண் முனைபற்று ஆரையம்பதி
கிழக்கு செல்வ விநாயகர் அறநெறி பாடசாலை மற்றும் நரசிம்மர் அறநெறி
பாடசாலையும் இணைந்து தெய்வீக கிராம நிகழ்வு என்னும் தொனிப்பொருளில்
நடைபவனி பேரணி ஒன்று இடம் பெற்றது .
ஆரையம்பதி பிரதேச
செயலகத்திலிருந்து நடைபவனி பேரணி ஆரம்பமானது , 175 மேற்பட்ட
மாணவர்கள் கிராமிய கலாச்சார உத்தியோகத்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.
ஆரையம்பதி பிரதேச செயலாளர் தினேஷ் தட்ஷன கௌரி தலைமையில் இடம் பெற்ற
கலாச்சார பேரணியானது ஆரையம்பதி திருநீற்றுக்கணி விநாயகர் ஆலயம் வரை இடம்
பெற்றது .
ஆலய முன்றலில் பூஜை வழிபாடுகள் பெற்றதை தொடர்ந்து
வரவேற்பு நடனம் அகதிகளை வரவேற்றல் தொடர்ந்து சிறார்களுக்கான விருதுகள்
வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது .
நன்றியுரையை தொடர்ந்து நிகழ்வு இனிது நிறைவு பெற்றது.