ஆரையம்பதியில் "தெய்வீக கிராம நிகழ்வு" என்னும் தொனிப்பொருளில் நடைபவனி பேரணி .

 

 














 

 

 

 




 

 

 






 


 









இந்து கலாச்சார அலுவலர்கள் திணைக்களமும்  மண் முனைபற்று  ஆரையம்பதி  கிழக்கு செல்வ விநாயகர் அறநெறி பாடசாலை மற்றும்   நரசிம்மர் அறநெறி பாடசாலையும் இணைந்து  தெய்வீக கிராம நிகழ்வு என்னும் தொனிப்பொருளில் நடைபவனி பேரணி  ஒன்று இடம் பெற்றது .
  ஆரையம்பதி பிரதேச செயலகத்திலிருந்து  நடைபவனி பேரணி  ஆரம்பமானது ,     175 மேற்பட்ட மாணவர்கள் கிராமிய கலாச்சார உத்தியோகத்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.

  ஆரையம்பதி பிரதேச செயலாளர் தினேஷ் தட்ஷன கௌரி தலைமையில் இடம் பெற்ற கலாச்சார பேரணியானது  ஆரையம்பதி திருநீற்றுக்கணி விநாயகர் ஆலயம் வரை இடம் பெற்றது .

 ஆலய முன்றலில்  பூஜை வழிபாடுகள் பெற்றதை தொடர்ந்து  வரவேற்பு நடனம் அகதிகளை வரவேற்றல் தொடர்ந்து சிறார்களுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது . 

 நன்றியுரையை  தொடர்ந்து   நிகழ்வு  இனிது நிறைவு பெற்றது.