உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவில் விழிப்புணர்வு ஊர்வலம் (03) இடம் பெற்றது.
மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற விழிப்புணர்வு நடை பவனியில் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி,
மண்முனை மேற்கு பிரதேச சபை தவிசாளர் த.கோபாலப்பிள்ளை பங்குபற்றுதலுடன் நடைபெற்றன.
வவுணதீவு இலங்கை வங்கிக்கிளையின் முன்றலில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட நடை பவனியானது, வவுணதீவு உழவர் சந்தியை அடைந்து அங்கு மட்/மமே/கொத்தியாபுலை கலைவாணி வித்தியாலய மாணவர்களால் 'பிளாத்திக்கு மாசுபாட்டை முறியடிப்போம்' எனும் தொனிப்பொருளில் வீதி நாடகம் அரங்கேற்றப்பட்டது.
உலக சுற்றாடல் தினம் எதிர்வரும் 05 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில் அதனை முன்னிட்டு இந்த வாரம் முழுவதும் சுற்றாடலை தூய்மையாக வைத்திருத்தல் மற்றும் பிளாஸ்டிக் பாவனையினை குறைத்தல் போன்ற விழிப்புணர்வு செயற்பாடுகள் நாடளாவிய ரீதியில் ஜனாதிபதி செயலகத்தின் வழிகாட்டலிற்கு அமைவாக இடம் பெற்று வருகின்றது.