கடந்த அரசாங்கத்தினால் 1000 தேசிய பாடசாலைகளை அமைக்கும் வேலைத்திட்டத்தில் 23 பாடசாலைகளே தேசிய பாடசாலைகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறன.
ஏனைய பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டி இருகிறது என பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.
கடந்த அரசாங்கத்தினால் தேசிய பாடசாலைகளாக பெயரிடப்பட்டிருக்கும் பாடசாலைகளை மீண்டும் மாகாணசபைக்கு கீழ் கொண்டுவரும் எண்ணம் இல்லை.
என்றாலும் தேசிய பாடசாலையாக பெயரிடப்பட்டிருக்கும் பாடசாலைகள், பெயர் பலகையில் மாத்திரமே தேசிய பாடசாலையாக இருந்ததே தவிர தேசிய பாடசாலையாக முன்னேற்ற எந்த வேலைத்திட்டமும் இருந்ததில்லை.
அந்த பாடசாலைகளை தெரிவு செய்து தேசிய பாடசாலைகளாக மாற்றுவதற்கே நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதற்காக வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டும் இருக்கிறது.