சுற்றாடல் அமைச்சினால் கிழக்கு மாகாணத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொலித்தீன் விற்பனை செய்யப்படும் இடங்களில் விசேட பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுப்பு
மத்திய சிற்றாடல் அதிகார சபையினால் இன்று தேசிய சுற்றாடல் வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று பல்வேறு விழிப்புணர்வு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது
மட்டக்களப்பு சுற்றாடல் பாதுகாப்பு பிரிவின் போலீசார் மற்றும் மாவட்ட சுற்றாடல் அதிகார சபையின் அதிகாரிகள் நகரின் பிரதான சந்தையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொலித்தின் விற்பனை செய்யும் வியாபார நிலையங்களில் விசேட பரிசோதனை செயற்பாடுகளை முன்னெடுத்தனர்
இதன் போது வியாபார அனுமதி பத்திரம் பொலித்தீன் செய்யப்பட்ட உணவு பொட்டலங்கள் பிளாஸ்டிக்கினால் செய்யப்பட்ட உபகரணங்களை விற்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் வியாபாரிகளுக்கு விசேட விளக்கங்கள் இங்கு வழங்கி வைக்கப்பட்டது
மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பதில் பணிப்பாளர் நா.சுந்தரேசன் தலைமையில் இந்த பரிசோதனை நடவடிக்கைகளும் விழிப்புணர்வு செயற்பாடுகளும் .
வரதன்