மாவட்ட அபிவிருத்தி திட்டங்களுக்கு அமைச்சரவையின் அனுமதிகள் பெற வேண்டி இருப்பதனாலே வட மாகாணத்தில் இருப்பது போல மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் புதிய மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் நியமிக்க ப்பட்டுள்ளார்- மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி
பிரபு
முன்னாள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரனுக்கு அவரது அமைச்சின் அதிகரித்த வேலைப்பளுக்கள் மற்றும் திருமலை மாவட்ட அபிவிருத்தி பிரதேச அபிவிருத்தி குழு கூட்டங்களை நடாத்த வேண்டி இருப்பதனாலும்
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி பணிகளை விரைவாக கொண்டு செல்வதற்காகவே புதிய மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக அமைச்சர் சுனில் கந்துநெத்தி அவர்கள் புதிதாக நியமனம் பெற்றுள்ளனர்
எதிர்க்கட்சிகளும் சில விஷமிகளும் இதனை வேண்டுமென்றே ஒரு பொய்யான கருத்து க்களை பரப்பி வருகின்ற போதிலும்
அவர் மாவட்டத்தை நன்கு அறிந்து பிரதேசத்தில் 10 வருடத்திற்கு மேல் அரசியல் பணிகளை முன்னெடுத்தவர் அவரது நியமனம் மூலம் மாவட்டத்திற்கு பல நன்மைகள் எதிர்காலத்தில் கிடைக்க ப்பெற உள்ளன என
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்கள் மட்டக்களப்பில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
வரதன்