தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வு
கிடைக்க வேண்டும் எனில் புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என இலங்கைத்
தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.
சாணக்கியன் தெரிவித்தார்.
புதிய அரசியலமைப்பு உருவாக்கம்
தொடர்பில் ஜனாதிபதி, தேர்தல் காலங்களில் தெரிவித்த விடயங்களை
செயற்படுத்துவாரா என்பதைத் தாம் எதிர்பார்த்துக் காத்திருப்பதாக சாணக்கியன்
குறிப்பிட்டார்.