இந்தியாவின், ஒடிசாவில்
உள்ள பூரி ஜகன்நாதர் ஆலயத்தின் ரத யாத்திரையின் போது, இன்று அதிகாலை
ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மூவர் உயிரிழந்ததுடன், 50க்கும்
மேற்பட்டோர் காயமடைந்தனர்.
உயிரிழந்தவர்களில் 2 பெண்களும், 70 வயதுடைய ஆணொருவரும் அடங்குவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 27 ஆம் திகதி ஆரம்பமாகி,
எதிர்வரும் ஜூலை 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த வருடாந்திர விழாவின்
மூன்றாவது நாளில் இந்த சம்பவம் நேர்ந்துள்ளது.
குறித்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள்
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், அவர்களில் சிலரின் நிலைமை
கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.