32 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள், 9 பிரதி பொலிஸ்மா அதிபர்களுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் .

 


9 பிரதி பொலிஸ்மா அதிபர்கள் உட்பட 32 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. 

தேசிய பொலிஸ்  ஆணைக்குழுவின் அனுமதிக்கு அமைய, இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ்  ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அவர்களில் 15 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களும் அடங்குகின்றனர். 

இதேவேளை, இலங்கை சிறைச்சாலைகளின் 2 சிறப்பு தர கண்காணிப்பாளர்கள், ஒரு கண்காணிப்பாளர், 8 உதவி கண்காணிப்பாளர்கள் மற்றும் 5 பதில் கண்காணிப்பாளர்கள் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

எனினும், வடக்கு கிழக்குப் பகுதிகளில் இந்த இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை. 

இடமாற்ற முடிவுகளின்படி, தற்போது அவர்கள் பணிபுரியும் இடங்களிலிருந்து வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இந்த இடமாற்றங்கள் 2025 ஜூலை 02 முதல் அமுலுக்கு வருகின்றன.