ஜூன் 26 சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம்

 




மனித சமூகத்தைச் சீர்கெடுப்பதில் போதைப்பொருள் உபயோகம் முதலிடம் வகிக்கிறது. போதைப்பொருள் பயன்பாடு மனித அறிவை மழுங்கச் செய்து சிந்திக்கும் திறனை அழித்து குடும்பம், சமூகத்தை தவறான பாதையில் இழுத்துச் சென்று விடும்.

அநீதிகளும், கொடுமைகளும், அராஜகங்களும், வன்முறையும் நாட்டில் அதிகரித்து கொண்டே இருக்கின்றன. போதைப்பொருள் கடத்தல், விற்பனை, இன்று மிகப்பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. உலகம் முழுவதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 30 கோடிக்கும் மேற்பட்டோர் போதைப் பொருள்களுக்கு அடிமையாக இருக்கின்றனர் என்று புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

போதைப்பொருள் பயன்படுத்துபவர்களில் மூன்றில் ஒருவர் பெண் என்பது வேதனைக்குரிய அதிர்ச்சித் தகவல். போதைக்கு அடிமையாவோரில் 85 விழுக்காடு படித்தவர்கள். அதில் 75 விழுக்காடு இளைஞர்கள் ஆவர்.

மது, சிகரெட் ஆகியவை முதலில் வழிகெடுத்து பிறகு அதையும் தாண்டி கஞ்சா, கொகைன், பிரவுன் சுகர், ஹெராயின், அபின், புகையிலை, ஒயிட்னர் போன்ற மனிதனை அழிக்கும் போதைப்பொருள்கள் இளைஞர்களின் வாழ்வைச் சீரழிக்கிறது. இவர்கள் மட்டுமின்றி இவர்களின் குடும்பங்கள், இவர்களால் பாதிப்புக்கு உள்ளாகும் அப்பாவிப் பெண்கள், குழந்தைகள் என்று பலருடைய வாழ்வும் சீரழிகின்றது. தனிமனித ஒழுக்கம் சீர்கெட்டு நாட்டின் முன்னேற்றப் பாதைக்கே போதை தடையாக இருக்கிறது. உலக வர்த்தகத்தில் பெட்ரோல், இராணுவத் தளவாடங்களுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் சட்டவிரோதமாக போதைப்பொருள் கடத்தல் வியாபாரம் கொடிகெட்டிப் பறக்கிறது.

இதில் படித்த இளைஞர்கள், செல்வந்தர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனைக் கண்டும் காணாத அதிகாரிகளும் இருக்கின்றார்கள். இதனால் ஊழலும் இலஞ்சமும் பெருகுகிறது. போதைப்பொருள்களைக் கடத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் போதைப்பொருள் பயன்படுத்து வோரின் குடும்பமும் பாதிக்கப்படுவதோடு பொருளாதார நெருக்கடியால் பரிதாபமான நிலையில் தற்கொøலயும் நடந்து கொண்டிருக்கிறது.

போதைப்பொருள் பயன்படுத்துவோ ருக்கு எதிராகப் பல சட்டங்கள் இருந்தாலும் இவற்றையெல்லாம் யாரும் மதிப்பதாக இல்லை. பொது இடங்களில் புகைத்தல், மது அருந்துதல் தென்படும் போது அதற்கான சரியான நடவடிக்கையை உடனுக்குடனே அரசு கண்டிப்பாக எடுத்தல் அவசியம். தலைக்கவசம் இல்லையென்றால் உயிருக்கு ஆபத்து என்பதை அறிவித்து அபராதம் விதிக்கும் காவல்துறையினரின் நடவடிக்கை போதைப் பொருள்களாலும் உயிருக்கும் சமூகத்திற்கும் ஆபத்து என்பதைக் கண்டித்தும், தண்டித்தும் அவர்கள் பொறுப்பைச் சரியான முறையில் நிறைவேற்ற வேண்டும். திரைப் படங்களில்  போதைப்பொருள்களைப் பயன்படுத்தும் காட்சிகளுக்குத் தடை விதிக்க வேண்டும்.


அரசின் கடமை

மக்களுடைய நலன்களைக் கருதி போதைப்பொருள்கள்  அனைத்தையும் முற்றிலுமாக ஒழிக்க அரசு முன் வரவேண் டும். சட்டத்திற்கு விரோதமாக போதைப் பொருள் கடத்துவோர், பயன்படுத்துவோ ருக்கு உடனுக்குடன் கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும். அரசு நடத்தும் மதுக்கடைகளை மூட வேண்டும். போதைப் பொருள் பயன்படுத்தியதால் சீர் கெட்ட ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தேவையான வாழ்வாதாரங்களை ஏற்படுத்தித் தருவது அரசின் கடமையாகும். சர்வதேச அளவில் போதைப்பொருளை ஒழிக்க பல முயற்சி களை மேற்கொள்ளல் வேண்டும்.

குடிமக்களின் கடமை

அன்றாட வாழ்வில் சாதாரண பிரச்னைகளைக் கூட சமாளிக்க முடியாதவர்கள் கையிலெடுக்கும் பழக்கம் தான் இந்த போதைப் பழக்கம். தனி மனித ஒழுக்கமே சமூகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும். இளைஞர்கள் நாளைய சமூகத்தின் முன்னோடிகள். அவர்கள் போதைப்பொருள்களை ஒழிப்பதில் வீரிய மாகச் செயல்பட வேண்டும். விஷம் அருந்து வதற்கு யாரும் முன்வர மாட்டார்கள் அதே போன்று போதைப் பொருளையும் பயன்படுத்தக் கூடாது. தீமைகள் செய்யா மலும், தீமைகளுக்குத் துணைபோகா மலும், தீமைகளைக் கற்றுக் கொடுக்காமலும், முடிந்த வரை தீமைகளைத் தடுத்துக் கொண்டிருப்பதே ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்.