



சர்வதேச யோகா தினத்தினை சிறப்பித்து மட்டக்களப்பு இராமகிருஷ்ணமிஷன் விவேகானந்த மனிதவள மேம்பாட்டு நிலையம் (21) சனிக்கிழமை சிவானந்த பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் சிறப்பு யோகா அளிக்கையை மேற்கொண்டனர்.
இராமகிருஷ்ணமிஷன் பொது முகாமையாளர் சுவாமி நீலமாதவானந்தஜி மற்றும் உதவிப் பொது முகாமையாளர் சுவாமி உமாதீஷானந்தஜி ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் , விசேட அத்திதியாக ஊவா வெல்லஸ பல்கலைக் கழக நூலகர் கலாநிதி பிரதீபன் கலந்து கொண்டார் .
மேலும் இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவம் பாக்கியநாதன், பிரதிமாநகர முதல்வர் வைரமுத்து தினேஷ்குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் அளிக்கையில் பங்கேற்றிருந்தனர்.
யோகா ஆசிரியர் S. ஸ்ரீதரன் யோகா அளிக்கையை நெறிப்படுத்தி இருந்தார்
இந்நிகழ்வில் அளிக்கை செய்த மாணவர்கள் மற்றும் அதிகள் நினைவுப் பரிசில் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். அத்தோடு யோகாவில் சாதனை படைத்த மாணவர்கள் பதக்கம் அணிவிக்கப்பட்டு,சான்றிதழ் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
இவ்யோகாசன நிகழ்வில் மாணவர்கள்,பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் பொதுமக்கள் நலன் விரும்பிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.