மட்டக்களப்பு மாவட்ட கிறிக்கட் சபையின் வருடாந்த பரிசளிப்பு விழா- 2025



 













 

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இளம் கிறிக்கட் வீரர்களை ஊக்குவிக்கும் பொருட்டு வருடாந்தம்
இலங்கை கிறிக்கட் சபையின் அனுசரனையுடன் நடாத்தப்பட்டு வரும் கௌரவிப்பு விழா இம்முறை மட்டக்களப்பு மாவட்ட கிறிக்கட் சபையின் தலைவர் எந்திரி என்,டீ.ரஞ்சன் தலைமையில் மட்டக்களப்பு சிங்கிங் பிஸ் விடுதியில்   நேற்றிரவு இடம் பெற்றது.

 நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி.ஜஸ்டினா முரளிதரன் கலந்து சிறப்பித்ததுடன், கிறிக்கட் விளையாட்டில் சாதனை படைத்த விளையாட்டு வீர வீராங்கனைகளுக்கு இதன் போது நினைவுச் சின்னங்களையும் பாடசாலை அணிகளுக்கான விளையாட்டு உபகரணங்களையும் வழங்கி வைத்தார்.

 இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் என்.தனஞ்சயன், இலங்கை கிறிக்கட் கட்டுப்பாட்டுச் சபையின் பிரதிநிதிகள், கிழக்கு மாகாண கிறிக்கட் தெரிவுக் குழுவின் தலைவர் பிட்டிக்கல, மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வலித் லீலாரத்ன  பலர்  கலந்து சிறப்பித்தனர்.

அதிதிகள் வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து, தேசிய கீதம் இசைக்கப்பட்டு  தொடர்ந்து  நிகழ்வில் நடனங்கள் அதிதிகள் உரை என்பன இடம் பெற்று சாதனை படைத்த விளையாட்டு வீர, வீராங்கணை ளுக்கான பரிசளிப்பும் கௌரவமும், பாடசாலைகள் மற்றும் விளையாட்டுக் கழகங்களுக்கான சுமார் 80 இலட்சம் பெறுமதியான விளையாட்டு உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

 வரதன்