
மட்டக்களப்பு கல்லடி உப்போடை, நொச்சிமுனையில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகப் பெருமானின் வருடாந்த மஹோற்சவம் 23.06.2025 திங்கட் கிழமை ஏகாதசி திதியும் ,உத்திரட்டாதி நட்சத்திரமும் கொண்ட நண்பகல் 12.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ளது .
27.06..2025 அன்று 3ம் குறிச்சி பொது மக்களின் மாம்பழத் திருவிழாவும், 28.06.2025 அன்று 4.ம் குறிச்சி பொது மக்களின் திருவிளக்குப் பூசையும், 20025.06.29. அன்று 5.ம் குறிச்சி பொதுமக்களால் வசந்த உற்சவமும் ,1ம் குறிச்சி பொது மக்களால்2025.06.30 அன்று திருவேட்டை திருவிழாவும், , 01.07.2025 அன்று இரண்டாம் குறிச்சி பொது மக்களால் தீமிதிப்பு மற்றும் தேரோட்ட நிகழ்வும் இடம் பெற உள்ளது
ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சண்முக வசந்த நாத குருக்கள் தலைமையில் மகோற்சவ திருவிழா நிகழ்வும் பூஜைகளும் இடம் பெறும்.
2025.07..01 அன்று செவ்வாய்க்கிழமை காலை 7.30.மணிக்கு தேரோட்டம் இடம் பெற உள்ளது .2025.07.02.புதன்கிழமை காலை 9.00.மணிக்கு தீர்த்தோற்சவம் நடைபெறும் .
சைவ அடியார்கள் அனைவரையும் மஹோற்ச திருவிழாவில் கலந்து கொண்டு விநாயக பெருமானின் திருவருளை பெற்றேகுமாறு ஆலய பரிபாலன சபையினர் அன்புடன் அழைக்கின்றனர் .
செய்தி ஆசிரியர்