வரலாற்று
பிரசித்தி பெற்ற கதிர்காமம் ஆடிவேல் விழா உற்சவத்தையொட்டிய
கதிர்காமத்துக்கான காட்டுப்பாதை நேற்று (20) வெள்ளிக்கிழமை திறந்து
வைக்கப்பட்டதும் முதல் நாளில் 10 ஆயிரத்து 450 அடியார்கள் காட்டுக்குள்
பிரவேசித்தனர்.
இது கடந்த 2000 ஆண்டு கால வரலாற்றில் முதல் நாளில் சென்ற அதிகூடிய அடியார்களின் எண்ணிக்கையாகும்.
கடந்த காலங்களில் பொதுவாக சுமார் நான்காயிரம் அடியார்கள் முதல் நாளில் பிரவேசிப்பதுண்டு.
கடந்த வருடம் மட்டும் அது 5000 ஐ தாண்டியது.
ஆனால் இவ் வருடம் அது வரலாற்று பதிவாக பத்தாயிரத்தை தாண்டிய வரலாறாக மாறியுள்ளது.
அதுமட்டுமின்றி இன்று சனிக்கிழமை 2 ஆம் நாள் சுமார் நான்காயிரம் அடியார்கள் காட்டுக்குள் பிரவேசித்தனர்.
இம்முறை சுமார் 50 ஆயிரம் பேர் வரை பயணிக்கலாம் என் எதிர்பார்க்கப்படுகிறது.
( உகந்தையிலிருந்து வி.ரி.சகாதேவராஜா)