வாழைச்சேனை வை.அஹமட் வித்தியாலயத்தின் தரம்-05 (2024) புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் சித்தி பெற்ற மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு.


 






 

பாடசாலை அதிபர் யூ.எல்.எம்.ஹரீஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்வித் திணைக்கள பிரதிக்கல்விப் பணிப்பாளர் கனகசுந்தரம் ஜெயவதனன் பங்கேற்றதுடன், கோறளைப்பற்று மேற்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.எம்.தாஹிர், ஆசிரிய வள நிலைய முகாமையாளர். ஏ. றியாஸ்,  மற்றும் பாடசாலை அதிபர்களான ஐ.உபைத்,  எல்.நிஜாமுதீன், எம்.நளீம் மெளலவி,  ஓய்வு நிலை அதிபர்களான எம்.இஸ்மாயில் எம்.செய்னுலாப்தீன், மக்கள் வங்கியின் வாழைச்சேனை கிளை பிரதி முகாமையாளர், மக்கள் வங்கி உத்தியோகத்தர்,  பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களும், கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் எம்.அனஸ், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

2024ல் குறித்த பரீட்சைக்கு தோற்றிய 91 மாணவர்களில் 176 புள்ளிகளைப் பெற்ற எம்எஸ்.பாத்திமா இந்திசாரா இப்பாடசாலையில் மாத்திரமல்லாமல் கல்வி வலயத்திலும் 1ம் இடத்தைப் பெற்றவர் என்பதும் விஷேடமாக குறிப்பிடத்தக்கது.

அத்துடன் கோட்ட மட்டத்திலுள்ள ஆரம்ப பிரிவு (22) பாடசாலைகளில் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் சித்தி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையில் இப்பாடசாலை 2ம் இடத்தையும், 70 புள்ளிகளுக்கு மேல் அதிகமான மாணவர்கள்
சித்தி பெற்றதன் அடிப்படையில் 1ம் இடத்தையும் நிலைநாட்டியிருந்தது.

'சிகரத்தில் மலர்ந்த புஷ்பங்கள்' எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற தரம்-05 சித்திபெற்ற மாணவர்களுக்கான கெளரவித்தலில் வெட்டுப் புள்ளிகளுக்குமேல் பெற்ற 30 மாணவர்களுக்கு சான்றிதழ்கள், நினைவுச் சின்னங்கள், பரிசில்கள் வழங்கப்பட்டு பாராட்டப்பட்டதுடன்,  கற்பித்த ஆசிரியர்களும் கெளரவிக்கப்பட்டனர் .

 இந்நிகழ்வில் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றதோடு,  கலைஞர்கள் உடற்பயிற்சி ஆசிரியர் கலந்தர் சுபைர், சம்சுன் குட்டி முஹம்மது சரீப் ஆகியோரின் பாடல்களும் சபையோரை மகிழ்வித்தன.