150 பொது அறிவுக் கேள்விகளுக்கு விடையளித்தல், 50 சொற்களுக்கான ஒத்தச் சொற்கள், 50 சொற்களுக்கான எதிர்ச் சொற்கள் மற்றும் 30 சமஸ்கிருத சொற்களுக்கான தமிழ்ச் சொற்கள் போன்றவற்றை மிகவும் குறைந்த நேரத்திற்குள் கூறி சோழன் உலக சாதனை படைத்த 3 வயது குழந்தை பவிஷ்
மட்டக்களப்பு மாவட்டம் கறுவேப்பங்கேணியில் வசித்து வரும் பிரசாத் மற்றும் ரம்யா ஆகியோரின் மகன் 3 வயதும் 6 மாதங்களுமான பவிஷ்.
இவர் 150 பொது அறிவுக் கேள்விகளுக்கான சரியை விடைகளை 4 நிமிடங்கள் மற்றும் 20 நொடிகளில் கூறினார். மேலும், 50 சொற்களுக்கான ஒத்தச் சொற்கள், 50 சொற்களுக்கான எதிர்ச் சொற்கள் போன்றவற்றை 2 நிமிடங்களில் கூறி முடித்த இவர் 30 சமஸ்கிருத சொற்களுக்கான தமிழ்ச் சொற்களை கூறி சோழன் உலக சாதனை படைத்தார்.
குழந்தையின் முயற்சியை உன்னிப்பாக கண்காணித்த சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் துணைச் செயலாளர் திரு.கதிரவன் த. இன்பராசா, மட்டக்களப்பு மாவட்டப் பொதுத் தலைவர் திரு.சிவ வரதகரன் மற்றும் செயற்குழு உறுப்பினர் கவிஞர்.திரு. தனுராஜ் போன்றோர் உலக சாதனையாகப் பதிவு செய்தனர்.
தொடர்ந்து,
இந்த நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக பங்கு கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பாராளுமன்ற உறுப்பினர் மாண்புபிகு ராசமாணிக்கம் சாணக்கியன் மற்றும் சிற்ப்பு விருந்தினர்கள், கௌரவ விருந்தர்கள், நடுவர்களுடன் இணைந்து சோழன் உலக சாதனை படைத்த குழ்நதை பவிசுக்கு சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், தங்கப் பதக்கம், நினைவுக் கேடயம், அடையாள அட்டை மற்றும் பைல் போன்றவற்றை வழங்கிப் பாராட்டினார்.