கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில், இன்று (05) அதிகாலை 10 கிலோ 323 கிராம் கொகெய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் விமான நிலைய சுங்க பிரிவு அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட சோதனையில் குறித்த போதைப்பொருளை விமானம் மூலம் இலங்கைக்கு கொண்டு வந்த 38 வயதுடைய இத்தாலிய பிரஜை கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் இந்த போதைப்பொருளை மூன்று டெடி பியர் (Teddy Bear) பொம்மைகளுக்குள் மறைத்து கொண்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.