தேசிய வெசாக் வாரத்தினை முன்னிட்டு ஏறாவூர் HELLO KIDS MONTESSORI -முன்பள்ளி நிர்வாகத்தினரால் வெசாக் குளிர்பான தன்சல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது
Hello Kids Montessori பணிப்பாளர் திரு. N.சிறிகாந்த் மற்றும் அதிபர் தமயந்தி சிறிகாந்த் ஆகியோரின் தலைமையில் இடம் பெற்ற தன்சல் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு கல்வி வலய முன் பிள்ளைப் பருவ பராமரிப்பும் அபிவிருத்திக்கும் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி. அனுரேகா விவேகானந்தன் பங்கேற்றிருந்தார்.
சிறப்பு அதிதிகளாக பாதுகாப்பு படை அதிகாரிகளும் . மதகுருவும் கலந்து சிறப்பித்தார்கள் .
இன்று ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் பொறுப்பாசிரியர்கள், முன்பள்ளி பிள்ளைகள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் அனைவரும் கலந்துகொண்டனர்.
இன,மத பேதங்களுக்கு அப்பால் வீதியால் பயணித்த பொதுமக்கள் குளிர்பான தன்சலை மகிழ்ச்சியோடு வாங்கி பருகியதை காணமுடிந்தது.
freelancer