ஆலையடிவேம்பு
ராமகிருஷ்ணா தேசிய பாடசாலைக்கு அருகாமையில் அதிபரும் ஆசிரியரும்
தாக்கப்பட்டது சம்பந்தமாக திருக்கோவில் பிரதேச சபையின் எதிர்கால தவிசாளர்
சுந்தரலிங்கம் சசிகுமார் தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்.
இது
போன்ற தாக்குதல் முயற்சி ஆனது எதிர்வரும் காலங்களில் மாணவர்களின்
கல்வியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இது எதிர் வருகின்ற உயர்தர சாதாரண
தரத்தில் இருக்கின்ற மாணவர்களின் மனநிலையை பாதிக்கக்கூடும்.
இது
சம்பந்தமாக எனது கண்டனத்தை தெரிவிப்பதோடு இந்த தாக்குதலுக்கு உடனடியாக
போலீஸ் திணைக்களம் உரிய நடவடிக்கை எடுத்து உரிய தண்டனை வழங்கவேண்டும்.
இல்லாவிடில் எதிர்வரும் காலங்களில் வேறு சிலராலும் இவ்வாறான தாக்குதல்களை
மேற்கொள்ள கூடும் என்பதையும் இங்கு கூறலாம். ஆகவே இதை தடுத்து
நிறுத்துவதற்கு உடனடியாக போலீஸ் திணைக்களம் தகுந்த நடவடிக்கை எடுக்க
வேண்டும்.
இல்லாவிடில் இந்த தாக்குதல் சம்பந்தமாக
உள்நாட்டு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சிற்கு நான் ஒரு கடிதத்தை அனுப்பி
அவர்களது கவனத்திற்கு கொண்டு வரஉள்ளேன்.
பொலீஸ் திணைக்களம் உரிய முறையில்சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் . என்றார்.
( வி.ரி.சகாதேவராஜா)