கடற்கொள்ளையர்களின் அட்டகாசங்களுக்கு முடிவு பெற்றுத்தருமாறு கோறி மீனவர் சமூகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்; இன்று செவ்வாய்க்கிழமை (13.05.2025) வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தில் இடம் பெற்றது.
வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தில் அல் அமான் படகு உரிமையாளர்கள் சங்கம், அல் ஸபா மீனவர் சங்கம், மட்டக்களப்பு மாவட்ட மீனவர் சம்மேளனம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்புப்போராட்டத்தில் படகு உரிமையாளர்கள், மீனவர்கள், பொது மக்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஆழ் கடலுக்கு தொழிலுக்கு செல்லும் படகுகளின் வலைகளில் இருந்து சிறய படகில் செல்லும் கள்வர்கள் வலைகளை அறுத்து சேதப்படுத்துவதுடன் அதில் உள்ள மீன்களையும் திருடிச் செல்கின்றனர் தாங்கள் பல இலட்சம் ரூபா செலவழித்து தொழிலுக்காக படகுகளை கடலுக்கு அனுப்பிவிட்டு படகு திரும்பி வரும் போது பல இலட்சம் ரூபா நஸ்டத்திலயே படகுகள் திரும்பி வருகின்றன. கள்வர்களின் திருட்டு செயலுக்கு முற்றுப்புள்ளி வைத்து எங்களது தொழிலை நிம்மதியாக செய்வதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகளும் அரசாங்கமும் தீர்வு பெற்றுத்தர வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மீனவர்கள் கோறிக்கை விடுகின்றனர்.
ஆழ்கடலில் இடம் பெரும் திருட்டு சம்பத்திற்கு தீர்வு பெற்றுத்தர வேண்டும் என்ற கோறிக்கையுடன் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக படகுகள் ஆழ்கடல் படகுகள் கடலுக்கு செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன இதனால் இரண்டாயிரத்திpற்கும் அதிகமான குடும்பங்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து நிற்;கின்றனர்.
இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் பல கோசங்கள் அடைந்த பதாதைகள் ஏந்தி தனது எதிர்ப்பை தெரிவித்தனர். பின்னர் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லஸந்த பண்டார மற்றும் வாழைச்சேனை கரையோர பாதுகாப்பு படை பொறுப்பதிகாரி சி.ஐ.விக்ரமசிங்ஹ ஆகியோருக்கு வாழைச்சேனை மீன்பிடி சங்க பிரதிநிதிகளால் மஹஜரும் கையளிக்கப்பட்டது.
மகஜர்களை பெற்றுக்கொண்ட அதிகாரிகள்; இந்த மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக தங்களது மேல் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி ஒரு வாரகாலத்துக்குள் தீர்வினை பெற்றுத்தருவாதாக உறுதியளித்ததன் பின்னர் கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டோர் கலைந்து சென்றனர்.
இதில் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்கள் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கல்குடா தொகுதி அமைப்பளாளர் ஹபீப் றிபான் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
ந.குகதர்சன்