ஏரியில் குளிக்கச் சென்ற சிறுமிகள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் .

 


விடுமுறைக்காக உறவினரின் வீட்டுக்கு வந்த மீரிகம மற்றும் ரத்னபுரத்தை சேர்ந்த 17 வயது இளம்பெண் மற்றும் 15 வயது சிறுமி, கல்கமுவ பகுதியில் உள்ள பாழுகடவல ஏரியில் குளிக்கச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
மூச்சுத்திணறலால் இருவரும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், அந்த பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இறந்தவர்களின் சடலங்கள் கல்கமுவ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.