மட்டக்களப்பு மாவட்டத்தின் முதல் தடவையாக கல்லடி கடல் மீன்கள் விளையாட்டு கழகத்தினால் கல்லடி பிரீமியர் லீக் உதைபந்தாட்ட சுற்று போட்டி .

  


 




மட்டக்களப்பு மாவட்டத்தின் முதல் தடவையாக கல்லடி கடல் மீன்கள் விளையாட்டு கழகத்தினால் கல்லடி பிரீமியர் லீக் உதைபந்தாட்ட சுற்று போட்டி முன்னெடுக்கப்பட்டது .
 ஏல விற்பனை மூலம் கடல்மீன்கள்  விளையாட்டு கழக அங்கத்தவர்களிடையே தெரிவு செய்யப்பட்ட கல்லடி சாக்ஸ் (உரிமையாளர்   சுரேஷ்குமார்),கல்லடி பிளண்டர்ஸ் ( உரிமையாளர்   ஸஷாத்), கல்லடி வேல்ஸ் (உரிமையாளர்  ருசியேந்திரன்), கல்லடி பராகுடாஷ் (உரிமையாளர்  புவனேஷ்), கல்லடி மாலின்ஸ்(உரிமையாளர்   ரூபன்), கல்லடி குரூபர்ஸ் (உரிமையாளர்  லீனஸ்) ஆகிய ஆறு அணிகளின்  பணிப்பாளர்களின் நெறிப்படுத்தலுடன்     20.04.2025 அன்று கடல் மீன்கள் விளையாட்டு கழக மைதானத்தில் பகல் இரவு போட்டியாக ஆரம்பிக்கப்பட்டது .
 இரண்டு வாரங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று 13.05.2025 அன்று இறுதி நிகழ்வானது அனைத்து கடல் மீன்கள் விளையாட்டு கழக நிர்வாக உறுப்பினர்கள் விளையாட்டு வீரர்கள் ஆதரவாளர்கள் ரசிகர்களின் பங்களிப்போடு கோலாகலமாக இடம் பெற்றது.
 
அத்துடன் இந்நிகழ்வுக்காக BDFA பிரதிநிதிகளும் நிகழ்விற்கு   எமக்கு நிதி உதவி மற்றும் பரிசுப்பொதிகளை அன்பளிப்பு செய்தோர் அதிதிகளாக அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
 கல்லடி கடல் மீன்கள் பிரிமியர் லீக் உதைபந்தாட்ட சுற்று போட்டியின் வெற்றியாளராக கல்லடி பராகுடாஷ் (பணிப்பாளர் புவனேஷ்) அணியினர் மகுடம் சூட்டினர். போட்டியின் சிறந்த விளையாட்டு வீரர்களாக காந்தன் மற்றும் பிரியகாந்த் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது