உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்ட மாணவர்களுக்கு அநீதி ஏற்படாது - பிரதமர் ஹரிணி

 



கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இடை நிறுத்தப்பட்டிருக்கும் மாணவர்களுக்கு அநீதி ஏற்படாமல் பார்த்துக்கொள்ள நடவடிக்கை எடுப்போம் என பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
மீள் திருத்தம் மற்றும் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிப்பதற்கான காலத்தையும் அவர்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்திருக்கிறது,என்றார்.