மட்டக்களப்பில் உலக சுற்றாடல் வாரத்தினை முன்னிட்டு பாடசாலை மாணவர் களுக்கான கழிவு முகாமைத்துவ விழிப்புணர்வூட்டல் செயல்மர்வு


 







 


 

ஜனாதிபதி செயலகத்தினால் முன்னெடுக்கப்படும் கிளீனிங் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தினை முன்னெடுக்கும்  முகமாக     சுற்றாடல் அமைச்சினால் சுற்றாடல் வாரத்தினை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் பல்வேறு விழிப்புணர்வு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன இதன் ஒரு அங்கமாக
 மட்டக்களப்பு மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையின்  உதவி பணிப்பாளர் நா.  சுந்தரேசன் தலைமையில் மட்டக்களப்பில் உள்ள ஐந்து கல்வி வளையங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கழிவு முகாமைத்துவம் சம்பந்தமான விழிப்புணர்வு  செயல்மர்வு இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.
மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சுற்றாடல் உத்தியோஸ்தர் திருமதி எஸ். காயத்ரி  பிரதான வளவாளராக கலந்து கொண்டு மாணவர் களுக்கான கழிவு முகாமைத்துவம் சம்பந்தமான விரிவான விளக்கங்களையும்
 பொலித்தீன் பாவனையால் சமூகத்திற்கு வரும் ஆபத்துக்கள் பற்றியும் இதன் மூலம் பரவும் நோய்கள் பற்றியும் இதனை சமூகத்திலும் பாடசாலைகளிலும்  வீடுகளிலும் சுற்றாடல் எவ்வாறு பேணி பாதுகாக்க வேண்டும் என்ற விளக்கங்களையும் வழங்கி வைத்தார்.
 மத்திய சிற்றாடல் அதிகார சபையின் மாவட்ட  அலுவலக உயர் அதிகாரிகள் பாடசாலை ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டதுடன்   சுற்றாடல் வாரத்தினை முன்னிட்டு சுற்றாடல் பாதிப்பினால் ஏற்படும் ஆபத்துக்கள் பற்றிய காட்சி  விவரண  படமும் கலந்து கொண்ட மாணவர்களுக்கு காண்பிக்கப்பட்டது.

வரதன்